ஜெபம் என்பது தேவனுடன் நம் இருதயத்திலிருந்து ஏறெடுக்கப்படும் ஒரு உரையாடல் மற்றும் உறவு ஆகும். இன்று பலரும் பொது இடங்களில் ஜெபிக்கச் சொன்னால், எனக்கு ஜெபிக்கத்தெரியாது என்று சொல்வதைக் கேட்டிருக்கிறேன். ஜெபம் என்பது ஒரு வரம் அல்லது கற்க வேண்டிய கடினமான கலை என்று நினைப்பதினாலேயே சிலர் ஜெபம் என்றது ஒதுங்குகின்றனர். மனிதரோடு மணிக்கணக்கில் பேசத்தயாராக இருக்கும் நான் தேவனுடன் பேச தெரியாது என்று சொல்வது முறையாகாதன்றோ? ஜெபம் மிக மிக எளிமையான, தேவனுக்கும் மனிதனுக்குமான இணைப்புப் பாலம் ஆகும். ஜெபம் குறித்த பல புத்தகங்கள் உண்டு என்றாலும் கூட ஜான் பெயிலி அவர்கள் எழுதிய A Diary of Private prayers என்ற நூலின் தமிழாக்கம் பிரார்த்தனை மாலை மிகவும் அருமையான புத்தகம் ஆகும். இப்புத்தகத்தில் காணப்படும் ஒவ்வொரு ஜெபங்களும் சொற்சுவையுடன் மாத்திரம் இல்லாமல் வசனச் செறிவுடனும் மிகுந்த அர்த்தமுள்ள கருத்தான ஜெபங்களை உள்ளடக்கியதாகவும் உள்ளது. வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் இப்புத்தகம் மிகுந்த பிரயோஜனமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
பிரார்த்தனை மாலை புத்தகத்தை Download செய்ய பின்வரும் சு்ட்டியை Click செய்யவும்: http://uploading.com/files/em1c5151/prayer%2Bgarland.pdf/
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment