Sunday, September 19, 2010

காட்டைக் கெடுக்கும் சிறு நரிகள் - R.Stanley

காட்டைக் கெடுக்கும் சிறு நரிகளைக் குறித்து உன்னதப்பாட்டு புத்தகத்தில் நாம் வாசிக்கிறோம். செத்த ஈக்கள் தைலக்காரனுடைய பரிமளதைலத்தை நாறிக் கெட்டுப்போகப்பண்ணும்; ஞானத்திலும் கனத்திலும் பேர்பெற்றவனைச் சொற்ப மதியீனமும் அப்படியே செய்யும். (பிரசங்கி 10:1 )
நம் வாழ்க்கையில் உள்ள சிறிய காரியங்கள் தானே என்று நாம் எண்ணுபவை கூட நம் சாட்சி வாழ்வைக் கெடுத்துப் போடுகின்றன.  சகோ. ஸ்டான்லி எழுதிய இப்புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கிற தலைப்புகளில் தியானித்து நம் வாழ்வை அலசினால் நிச்சயமாகவே நம் வாழ்வு இனி கனி தரும் வாழ்வாக மாறும் என்பதில் ஐயமில்லை. இப்புத்தகத்தை தனிப்பட்ட தியானத்திற்காம மட்டுமல்லாது குழுவாக, குடும்பமாக கூடிவரும் போதும் பயன்படுத்தி பயன் பெறலாம்.

சிறு நரிகள் புத்தகத்தை பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள சுட்டியை கிளிக் செய்யவும்.


Download சிறு நரிகள்

Tuesday, September 14, 2010

தெளிவாக பதில்கள் - சகோ.R.ஸ்டான்லி (BYM)

இன்று கிறிஸ்தவத்தில் கேள்விகள் எழுப்புபவர்கள் அனேகர். ஆனால் பதில் சொல்லுபவர்கள் வெகுசிலரே. தமிழக கிறிஸ்தவர்கள் மத்தியில் எழுத்து ஊழியத்தில் மிகவும் அறியப்பட்டவர்களுல் சகோ.ஸ்டான்லி அவர்களும் ஒருவர். இவர் எழுதிய “தெளிவான பதில்கள்” தொகுப்பு ஒன்று 50 நடைமுறை மற்றும் கருகலான கிறிஸ்தவக் கேள்விகளுக்கு பதிலளிக்கிறது. ஏழு தலைப்புகளின் கீழ் இப்புத்த்கத்தில் கேள்விகள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. அவை

1.கிறிஸ்தவ வாழ்வு
2,கிறிஸ்தவ உபதேசம்
3.ஆவியானவரும் வரங்களும்
4.திருச்சபை
5.கிறிஸ்தவ ஊழியம்
6.பாலுறவும் திருமணமும்
7. சமூக வாழ்வு

மிகவும் பயனுள்ள இந்நூலின் மின் பதிப்பு இரண்டு முறைகளில் தரவேற்றப்பட்டுள்ளது. தலைப்பு வாரியாக ஒன்றும், முழுப் புத்தகமாக ஒன்றும் தரவேற்றப்பட்டுள்ளது. வாசித்து பயனுறுங்கள்.

தெளிவான பதில்கள் - சகோ.ஆர்.ஸ்டான்லி
1. முழுப்புத்தகம் 
2. பகுதி பகுதியாக